Saturday 20 September, 2008

தடம் இல்லா வழி

ஓடிக்கொண்டிருக்கும் கோதாவரி அதன் மீது இருள் அடர்ந்து கிடக்கும் இரவு வண்டல் இறைக்க வழியில்லாமல் கரைகளுக்குள் அடைபட்டுப்போன கைதி நதி ஆற்றுக்குள் சிறைபட்டுப்போன ஓடங்கள் இக்கரைக்கும் அக்கரைக்குமாக வாழ்வை, குதூகலத்தை , புலம்பல்களை என கரைசேர்ப்பதிலேயே அமிழ்ந்து போகும் அவற்றின் வாழ்க்கை கணந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நதி கரை சேர்க்கும் ஒரு ஓடம் தடம் இல்லா வழி என்றாலும் ஆதிமனித ஒர்மயிலிருந்து இன்றுவரை மாறாத தொடர் பயணங்கள் .