Wednesday 30 July, 2008

உறவுகள் உதிர்ந்த போழ்து

உன் உறவுதிர்ந்த காலம் அது . நன்றாய் நினைவிருக்கிறது உதிரும் உறவு கிழித்த வலி அறியமாட்டா உன் விலகிச்சென்ற வேர்கள் . தனித்தும், தொலைந்தும் தொலைவிலும் நின்ற நான். இழப்பென்பது தனிமை. அடைக்குள்ளே உடைந்துபோன பறவையின் ஓலம் மழையின்றி மண்ணான பயிரின் ஓலம் இதில் எத்தனை நீ அறிவாய்? அதனால் சொல்கிறேன் இழப்பு தனிமை. இழக்காதவரை தனிமை தெரிவதில்லை.